Search This Blog

Wednesday, August 3, 2016

இந்திய ராணுவத்தில் செவிலியர் பணி

இந்திய ராணுவத்தில் நிரப்பப்பட உள்ள செவிலியர் பணிக்கு செவிலியர் துறையில் எம்.எஸ்சி அல்லது பிஎஸ்சி நர்சிங் படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி  
                செவிலியர்
தகுதி : 
          செவிலியர் துறையில் எம்.எஸ்சி, பிஎஸ்சி படித்திருக்க வேண்டும். மாநில நர்சிங் கவுன்சிலில் மிட்வொய்ப்பாக பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம்: 
               மாதம் ரூ.15,600. + ரூ.5,400. ராணுவ சேவை ஊதியம் ரூ.4,200 மற்றும் இதர படிகள்.
வயது வரம்பு: 
                    21 – 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: 
           எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு செப்டம்பர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் நடைபெறும்.
எழுத்துத் தேர்வு மையம்: 
                            லக்னோ, புனே
நேர்முகத் தேர்வு: 
                          அக்டோபர் மாதத்தில் புதுதில்லியில் நடைபெறும்.
மேற்கண்ட தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் 14 ஆண்டுகள் பணியில் லெப்டினென்ட் அந்தஸ்தில் நியமிக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
       www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.08.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment