Search This Blog

Friday, July 15, 2016

முத்திரைத்தாள் அச்சகத்தில் டெக்னீஷியன் பணியிடங்கள்

மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான முத்திரைத்தாள் அச்சகத்தில் (SPMCIL) காலியாக உள்ள இளநிலை டெக்னீஷியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
No.Admn./2(167)/2016-17/Advt. No.10
பணி                         : ஜூனியர் டெக்னீஷியன்
காலியிடங்கள்     : 28
கல்வித்தகுதி    : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ-யில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்                   : மாதம் ரூ.5,200 - 20,20,000 + தர ஊதியம் ரூ.1,800.
வயது வரம்பு      : 20.07.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பிலிருந்து எஸ்சி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்           : பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை      : spmhoshangabad.spmcil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://spmhoshangabad.spmcil.com/UploadDocument/Adv_Eng_%20Hindi.649fe7f0-0ef8-4bfd-903e-787617a61cb3.pdf  என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள்

ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பம் வெள்ளிக்கிழமை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அதன் கீழ் இயங்கும் அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் காலியாக இருக்கும் முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், இளம் விரிவுரையாளர் ஆகிய பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்காக வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி தேர்வு நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவங்கள், வெள்ளிக்கிழமை (ஜூலை 15) முதல் இம்மாதம் 30 ஆம் தேதி மாலை 5.30 மணி வரை திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விநியோகம் செய்யப்பட உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 30 ஆம் தேதி மாலை 5.30 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் உதவியாளர் பணியிடங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், நகராட்சிப் பகுதிகளுக்கு நகராட்சி ஆணையரிடமும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (ஜூலை 18) முதல் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 28-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பணியிடம், விண்ணப்பதாரர் குடியிருப்புக்கு 3 கி.மீ தொலைவில் இருத்தல் வேண்டும்.
சத்துணவு அமைப்பாளர் பணிக்கு: பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயதுக்கு மேல் 41 வயதுக்குள் இருக்க வேண்டும். பழங்குடியினர் 8-ஆம் தேர்ச்சி (அ) தோல்வி இருக்கலாம். 18 வயதுக்கு மேல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
சமையல் உதவியாளர் பணிக்கு: பொதுப் பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) தேர்ச்சி பெறாதவர்கள் இருக்கலாம். 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பழங்குடியினர் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதுமானது. 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பொதுப் பிரிவில், விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் கடிதம் வாயிலாகத் தெரிவிக்கப்படும். இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

பல்நோக்கு பணியாளருக்கான காலியிடங்கள்

தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தில் உள்ள ராணுவ பதிவேடுகள் அலுவலகத்தில் பல்நோக்கு பணியாளருக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி                            : Multi Tasking Staff (Peon)
காலியிடங்கள்        : 15
சம்பளம்                    : மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
வயதுவரம்பு      : 18 - 25க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி                            : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.davp.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSB-2068 கான்ஸ்டபிள் பணியிடங்கள்

இந்திய ராணுவத்தின் துணை ராணுவப் படைகளில் ஒன்றான சாஸ்த்ரா சீமா பால் (SSB) படையில் நிரப்பப்பட உள்ள 2068 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: கான்ஸ்டபிள் (டிரைவர்): (ஆண்கள் மட்டும்)
காலியிடங்கள்: 731
பணி: கான்ஸ்டபிள் (சமையலர்): (ஆண்கள் மட்டும்)
காலியிடங்கள்: 349
பணி: கான்ஸ்டபிள் (சமையலர்): (பெண்கள் மட்டும்)
காலியிடங்கள்: 60
பணி: கான்ஸ்டபிள் (வாஷர்மேன்): (ஆண்கள் மட்டும்)
காலியிடங்கள்: 170
பணி: கான்ஸ்டபிள் (வாஷர்மேன்): (பெண்கள் மட்டும்)
காலியிடங்கள்: 30
பணி: கான்ஸ்டபிள் (பார்பர்): (ஆண்கள் மட்டும்)
காலியிடங்கள்: 82
பணி: கான்ஸ்டபிள் (பார்பர்): (பெண்கள் மட்டும்)
காலியிடங்கள்: 15
பணி: கான்ஸ்டபிள் (சவேவாலா): (ஆண்கள் மட்டும்)
காலியிடங்கள்: 176
பணி: கான்ஸ்டபிள் (சவேவாலா): (பெண்கள் மட்டும்)
காலியிடங்கள்: 30
பணி: கான்ஸ்டபிள் (வாட்டர் கேரியர்): (ஆண்கள் மட்டும்)
காலியிடங்கள்: 395
பணி: கான்ஸ்டபிள் (வாட்டர் கேரியர்): (பெண்கள் மட்டும்)
காலியிடங்கள்: 30
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்மந்தப்பட்ட தொழிற்பிரிவில் ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டு ஐடிஐ முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: ஓட்டுநர் பணிக்கு 21 - 27க்குள்ளும், இதர பணிகளுக்கு 18 - 23க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஒபிசியினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்: ரூ.50. இதனை போஸ்டர் ஆர்டர், டிமாண்ட் டிராப்ட், பேங்கர் செக் ஆகிய ஏதாவதொன்றின் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ssbrectt.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Inspector General,
Frontier Headquarter SSB,
Sankalp Bhawan, Vibhuti Khand,
Plot No:TC/35-V-2,
LUCKNOW (U.P.) PIN: 226010.

இதர பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Inspector,
Frontier Headquarter,
Sashastra Seema Bal,
Rukanpura Bailey Road,
Patna (Bihar)- 800014.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.07.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ssbrectt.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Dhina thanthi velaivaippu